For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
மத்திய பிரதேசத்தில் மேலும் 29 மயில்கள் சாவு
மொரீனா:
மத்திய பிரதேச மாவட்டம் மொரீனாவில் மேலும் 29 மயில்கள் இறந்துள்ளன. இதுவரை நான்கு நாட்களில் மொத்தம் 68 மயில்கள்இறந்துள்ளன.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மகாராஜ்பூர் கிராம மக்கள் கூறுகையில், கடந்த நான்கு, ஐந்து நாட்களாகவே மயில்கள் செத்துக் கொண்டிருப்பதாகதெரிவித்தனர்.பன்மூர், சிவில் லைன்ஸ்,நூராபாத் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மயில்கள் உள்ளன.
வயல்களில் பயிர்களுக்குப் போடப்பட்டிருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டதால் மயில்கள் இறப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, July 9, 2000, 5:30 [IST]