தமிழகத்தில் இன்று
கடனை அடைப்போம் வாருங்கள்.. நடிகர்களை அழைக்கிறார் விஜயகாந்த்
சென்னை:
நடிகர் சங்கக் கடனை அடைக்க உடனடியாக ரூ. 5 லட்சமும், இனிமேல் நடிக்கப்போகும் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு லட்ச ரூபாய் வீதம் வழங்கப் போவதாகபதவியேற்பு விழாவில் அறிவித்தார் நடிகர் விஜயகாந்த்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் புதிய தலைவராக நடிகர்விஜயகாந்த், செயலாளராக சரத்குமார், துணைத் தலைவர்களாக நெப்போலியன்,எஸ்.எஸ்.சந்திரன், தமிழ்ச்செல்வி, பொருளாளராக காளை உள்ளிட்ட விஜயகாந்த்அணியினர் அமோக வெற்றி பெற்றனர்.
சென்னையில் உள்ள நடிகர் சங்க கட்டடத்தில் புதன் கிழமை இவர்கள் அனைவரும்பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பேசிய விஜயகாந்த் கூறுகையில், இதேபோல்ஒவ்வொரு நடிகரும் சங்கக் கடனை அடைக்க உதவி செய்ய வேண்டும்.ஒவ்வொருத்தரும் உதவி செய்தால் தான் கடனை அடைக்க முடியும். நமக்குள்இனிமேல் பாகுபாடு கூடாது என்றார்.
விழாவில் சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களை தவிர முன்னணிநடிகர்களான ரஜினி, கமல், இளம் நடிகர்களான அஜீத், விஜய், பிரபுதேவா உள்ளிட்டயாரும் கலந்து கொள்ளவில்லை. அதிலும் நடிகைகளில் பெரும்பாலோர் வரவில்லை.செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட குஷ்பு, மனோரமா, ராதிகா,ரேவதியை தவிர வேறு யாரும் வரவில்லை.
இதுகுறித்து விஜயகாந்த் மிகவும் வருத்தம் தெரிவித்தார். பதவியேற்பு விழாவுக்குவரும்படி பலருக்கு அழைப்பிதழ் அனுப்பியும் வராதது வருத்தமளிக்கிறது என்றார்.
பதவியேற்றதும் முதல்வர் கருணாநிதி, மூத்த நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோரைசந்தித்து வாழ்த்துப் பெற்றார் விஜயகாந்த்.