தமிழகத்தில் இன்று
வழுக்கி விழுந்து இறந்த 50 வயது யானை
நாகர்கோயில்:
நாகர்கோவில் அருகே, பேச்சிப்பாறை என்ற இடத்தில் அரிய வகை பெண் யானைஒன்று வழுக்கி விழுந்து இறந்தது.
இந்த யானை குட்டை இனத்தைச் சேர்ந்தது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறைஅணைஅருகே உள்ள தோட்டமலை காடு உள்ளது . அங்கே கடந்த சில நாட்களாகஆபூர்வமான 50 வயதான யானை சுற்றிக் கொண்டிருந்தது. அதை ஊர் மக்கள் யாரும்பெரிதாக எண்ணி கண்டு கொள்ளவில்லை.
பொதுவாக பெண் யானைகள் தனியாக சுற்றித் திரியாது. ஆண் யானையுடனோஅல்லது கூட்டத்துடனோதான் இருக்கும். ஏதாவது நோய் இருக்குமானால் தனியே வரவாய்ப்புண்டு.
அந்த குட்டைப் பெண் யானை காட்டிற்குள்ளே இறந்து அழுகிய நிலையில்கண்டுபிடிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகுபிரேதப் பரிசோதனைக்குப் பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
யானை உயரமான இடத்திலிருந்து வழுக்கி விழுந்ததற்கான அடையாளம்காணப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications