தமிழகத்தில் இன்று
பிரெட் லீ பெளலிங் குறித்து ஐ.சி.சி. விசாரிக்கும்
லண்டன்:
"சந்தேக கேஸ் வரிசையில் புதிதாக சேர்ந்துள்ள ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பிரெட் லீயின் பந்துவீச்சு குறித்து விவாதிக்க சர்வதேச கிரிக்கெட்கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிபுணர் குழுவின் கூட்டம் லண்டனில் நடக்கிறது.
லீயின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதால், அதுகுறித்து விவாதிக்க நிபுணர் குழுவின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்குழு,பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு குறித்துக் கூறப்படும் புகார்களை விசாரித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஆலோசனை வழங்கும்.
பிரெட் லீ குறித்து விசாரிக்குமாற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலைக் கேட்டுக் கொண்டதையடுத்து நிபுணர் குழுகூடுகிறது.
ஆகஸ்ட் 16-ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்குகிறது.அதற்குள் பிரெட் லீ குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது.
12 பேர் கொண்ட இந்த நிபுணர் குழுவிற்கு இந்திய முன்னள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தலைவராக இருக்கிறார். இம்ரான் கான, மைக்கேல் ஹோல்டிங்உள்பட 11 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.