தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

புகார்கள் எல்லாமே பொய்!

சென்னை:

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட வழக்கு இது. புகார்கள் எல்லாமே பொய் என்று மாஜி அதிமுகஅமைச்சர் பரமசிவம் சென்னை தனி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தவர்அ.மா.பரமசிவம். பதவியில் இருந்த காலத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாகதனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கு செவ்வாய் கிழமை விசாரணைக்கு வந்தபோது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313 வது பிரிவின்படிபரமசிவத்திடம் நீதிபதி கேள்விகள் கேட்டார். நீதிபதி அன்பழகன் கேட்ட 104 கேள்விகளில் எல்லாவற்றிற்கும்தெரியும், தெரியாது என்றே பதிலளித்தார் பரமசிவம்.

பின்னர் எழுத்து மூலமாக பரமசிவம் அளித்த வாக்குமூலத்தில், என் மீது கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள்எல்லாம் பொய். அரசியல்ரீதியாக பழி வாங்கும் நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு இது.

என்னுடைய உண்மையான வருமானத்தை மறைத்து விட்டு, செலவுகளை கூட்டி பொய்யான வழக்கைபுனைந்துள்ளது போலீஸ்.

என்னுடைய குடும்பம் விவசாயக் குடும்பம். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காலக் கட்டத்தில் விவசாயம்மூலமாக 14 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்துள்ளது. எனது இளையமகன் காதணி விழா மூலமாகசெலவு போக 2 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் 10 லட்ச ரூபாய் செலவில்தான் வீடு கட்டினேன். ஆனால், அதன் மதிப்பை அதிகமாக்கிபொய் வழக்கு போட்டுள்ளது போலீஸ் என்றார் பரமசிவம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+