For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் செங்கோட்டையன்

சென்னை:

தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான ஊழல் வழக்கு தீர்ப்பை நெருங்குகிறது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர்செங்கோட்டையன். இவரது பதவிக் காலத்தில் ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் உதிரி பாகங்கள் வாங்கியதில்ஊழல் நடந்துள்ளதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கு முதலாவது தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய் கிழமை நடந்த விசாரணையில்செங்கோட்டையன் தரப்பில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் சாட்சியம் அளித்தார்.அவர் தனது சாட்சியத்தில், ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.

பின்னர் இவ்வழக்கில் வக்கீல்கள் இறுதி வாதத்திற்கான தேதியை 17ம் தேதி நிர்ணயிக்கப் போவதாக நீதிபதிஆறுகப் பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டார்.

வக்கீல்கள் இறுதி வாதம்தான் வழக்கின் இறுதி கட்டம். அது முடிந்ததும் தீர்ப்பு கூறப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X