For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஐயோ பாவம் ஜெ. ...பரிதாபப்படுகிறார் வைகோ

சிவகாசி:

நிலை தடுமமாறி விரக்தியின் எல்லைக்குப் போய் விட்ட ஜெயலலிதாவுக்காக நான்பரிதாபப்படுகிறேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சிவகாசியில் ஊனமுற்றோருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்குசெயற்கை கால் கருவிகளை வழங்கி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோபேசினார்.

ஜெயலலிதா பேசிய விவரம் முழுவதையும் எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை.வெளியிட முடியாத அளவு பேசியதால் தான் அவை வெளியிடப்படவில்லை.அவ்வளவு மோசமாக பேசியுள்ளார். அவர் அறிக்கையின் முழு நகல் எனக்குகிடைத்துள்ளது.

வாஜ்பாய் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும். உள்துறை அமைச்சர் அத்வானிராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட வேண்டும்என ஜனாதிபதிக்கே உத்திரவிடுவது போல் அவரது அறிக்கை அமைந்துள்ளது.

இலங்கை தூதர், சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அதனஎதிரொலிதான் ஜெயலலிதாவின் இந்த அறிக்கை. முதல்வர் கருணாநிதி 1974-ம்ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றிய சுயாட்சி கொள்கைக்கும், தற்போது ஜம்முகாஷ்மீரில் நிறைவேற்றப்பட்டுள்ள சுயாட்சி தீர்மானத்திற்கும் நிறைய வேறுபாடுகள்உள்ளன. அது தெரியாமல் ஜெயலலிதா உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்கிறார்.

ஜெயலலிதா தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார். விரக்தியின் எல்லையில்இருக்கிறார். அதனால் அனைவர் மேலும் குற்றம் கண்டு அனைவரையும் வசைபாடிக்கொண்டிருக்கிறார். அவரது நிலை கண்டு நான் பரிதாபப்படுகிறேன் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X