For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

அப்துல் கலாமுக்கு ராமானுஜர் விருது

சென்னை :

அணு விஞ்ஞானி அப்துல்கலாமுக்கு ராமானுஜர் விருது சென்னையில் முதல்வர் கருணாநிதியால் வழங்கப்படுகிறது.

சென்னையில் 1996-ம் ஆண்டு ஆழ்வார்கள் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. இதனுடைய தலைவர் ஆர்.எம்.வீரப்பன். நிறுவன செயலாளர்எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆண்டு தோறும் இந்த மையம் சார்பாக ராமானுஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டுவருகிறது.

விருது பெறுவோருக்கு ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப்பரிசும், வெள்ளிக் கேடயமும் வழங்கப்படும். 1999-ம் ஆண்டு ஜூலையில் பாராளுமன்ற தேர்தல்நடந்ததால் அப்பொழுது இந்த விருது வழங்கப்படவில்லை. எனவே இப்பொழுது 1999, 2000 ஆகிய இரு ஆண்டுகளுக்கும் விருதுகள் பெறுவோர் பட்டியல்அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விருது பெறுவோர் பட்டியலை புதன்கிழமை நிருபர்களிடம் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டார். ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் விருது வழங்கும் விழாஆகஸ்டு மாதம் 20-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. முதல்வர் கருணாநதி தலைமை தாங்கி விருதுகளை வழங்குகிறார்.

1999-ம் ஆண்டுக்கான ராமானுஜர் விருது புகழ் பெற்ற விஞ்ஞானி அப்துல் கலாமுக்கும், அண்ணா விருது டாக்டர் கா.செல்லப்பனுக்கும், கலைஞர் விருதுகணபதி ஸ்தபதிக்கும், எம்.ஜி.ஆர் விருது வலம்புரி ஜானுக்கும் வழங்கப்படும்.

2000- ம் ஆண்டுக்கான ராமானுஜர் விருது பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கும், அண்ணாவிருது எழுத்தாளர் பகீரதனுக்கும், கலைஞர் விருது எழுத்தாளர்வள்ளிக்கண்ணனுக்கும், எம்.ஜி.ஆர் விருது பிரேமா நந்தகுமாருக்கும் வழங்கப்படுகிறது என்று ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X