தமிழகத்தில் இன்று
வங்கதேச வீரர்கள் சுட்டு 2 பி.எஸ்.எப். வீரர்கள் சாவு
சிலிகுரி:
இந்திய, வங்கதேச எல்லையில் பாஷ் - கோடால் பகுதியில் வங்கதேச ரைபிள்ஸ் படை வீரர்கள் சுட்டதில் 2 இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்இறந்தனர்.
போலீஸ் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) கே.சி.மீனா இதுகுறித்துக் கூறுகையில், இந்திய, வங்கதேச எல்லைப் பகுதியில் கடந்த புதன்கிழமை 3 கடத்தல்காரர்கள்சர்க்கரை மற்றும் பாக்குகளை கடத்திக் கொண்டு தப்பிக்க முயன்ற போது எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து வங்கதேச எல்லையிலிருந்து, வங்கதேச ரைபிள்ஸ் படையினர் துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை நடந்த சம்பவத்தில், ஹவில்தார் ஆர்.மல்லிகார்ஜூன் (42), மற்றும் தாருலா ஓரான் (30) ஆகிய இரு எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்கள், ரைபிள்ஸ் படை வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர்.
இதற்கிடையே இந்திய, வங்கதேச எல்லைப்பகுதியில் பதட்டத்தைத் தணிப்பதற்காக வியாழக்கிழமை பிற்பகல் வங்கதேச ரைபிள்ஸ் மற்றும் எல்லைப்பாதுகாப்புப் படை அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.
சுட்டுக் கொல்லப்பட்ட இரு கடத்தல்காரர்களின் உடல்களும், வங்கதேச ரைபிள்ஸ் படையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்றார் அவர்.
யு.என்.ஐ.