தமிழகத்தில் இன்று
சென்னையை பரவசப்படுத்திய செவ்வாடை பக்தர்கள்
சென்னை:
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மணி விழாவின் ஒரு பகுதியாக சென்னையில்பக்தர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது.
செவ்வாடையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தது,சென்னை சாலைகளை செம்மை நிறத்திற்குக் கொண்டு சென்றது.
அடிகளாரின் மணி விழா அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி நடக்கிறது. இதையொட்டிமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்கள் சார்பில் பல்வேறுநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. சென்னை மாவட்ட மன்றங்கள் சார்பில் மணி விழா,பனகல் பார்க்கில் நடந்தது.
விழாவில் பங்காரு அடிகளார், மனைவி லட்சுமியுடன் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனார், ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலிஉள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மாலை 5 மணியளில் வள்ளுவர் கோட்டத்திலிருந்து செவ்வாடைபக்தர்களின் பிரமாண்ட ஊர்வலம் தொடங்கியது. சென்னை நகர காவல்துறை கூடுதல்ஆணையர் பாலச்சந்திரன் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். பல்வேறு சாலைகள்வழியாக தி.நகர் பனகல் பார்க்கை சென்றடைந்தது.












Click it and Unblock the Notifications