தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

"காவிரிப் பிரச்சினைக்கு ஆணையம் தீர்வல்ல

சென்னை:

காவிரி நதிநீர் ஆணையத்தை விட்டு தமிழகம் வெளியேறி உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றுகாங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மணிசங்கர் அய்யர்வலியுறுத்தியுள்ளார்.

காவிரிடெல்டா பகுதிகள் அடங்கிய மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில்டெல்லியில் நடந்து முடிந்த காவிரி ஆணையக் கூட்டம் பற்றி மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டி வருமாறு:

காவிரிப் பிரச்னை தொடர்பாக 1998ம் ஆண்டு ஆகஸ்ட்டில் வாஜ்பாய் - கருணாநிதிக்கு இடையேஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு மேட்டூர் அணைக்கு அட்டவணைப்படி உரிய அளவு தண்ணீர் வரவேஇல்லை.

உண்மை நிலை இவ்வாறு இருக்கும்பட்சத்தில் காவிரி நதி நீர் ஆணையத்தில் தமிழகம் நீடிக்க வேண்டும்என்பதில் அர்த்தமே இல்லை.

6 டி.எம்.சி.யா அல்லது 19 டி.எம்.சி.யா என்பதல்ல பிரச்னை. நாம் ஒன்றும் பிச்சைக்காரர்கள்அல்ல. கர்நாடகாவின் கருணையை நம்பி இருப்பதற்கு.

காவிரி டிரிபியூனல் தமிழகம் தண்ணீர் பெற வேண்டிய உரிமையை நிலை நாட்டியுள்ளது. அதன்படிகர்நாடகாவிடம் தண்ணீர் பெறுவதற்கு உரிமை உள்ளது. டிரிபியூனலின் இடைக்கால உத்தரவுப்படி தண்ணீர்பெறுவதை விட்டு விட்டு கர்நாடகாவிடம் கருணை காட்டுங்கள் என்று கேட்பது வெடகக்கேடு.

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் சம்பந்தப்பட்ட இந்த பிரச்னையில் முதல்வர் கருணாநிதிதொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறார். இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நீதிமன்றத்தின் மூலமே நியாயம் கிடைக்க முடியும். எனவேகாவிரி ஆணையத்தில் இருந்து தமிழகம் உடனடியாக வெளியேற வேண்டும். உச்சநீதிமன்றத்தில்விசாரணையில் இருக்கும் கர்நாடகம் - தமிழகம் இடையிலான காவிரி நதி நீர்ப் பிரச்னை பற்றியவழக்கை சந்திக்க வேண்டும்.

அவ்வழக்கை உடனடியாக விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கும்படி கோர வேண்டும் என்றார் மணிசங்கர்அய்யர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+