தமிழகத்தில் இன்று
நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற பிஜி புரட்சிக்காரர்கள் மறுப்பு
வெலிங்க்டன்:
பிஜியில், நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புரட்சிக்காரர்கள் வெளியேற மறுத்ததையடுத்து அங்கு தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
பிஜியில் புரட்சிக்காரர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட அனைத்துப் பிணைக் கைதிகளும்விடுவிக்கப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில், பிரதமர் செனியா கராசே தலைமையிலான புதிய அரசு திங்கள்கிழமை பதவியேற்பதாக இருந்தது. இதில்இரண்டு இந்தியர்களும் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய ஜனாதிபதியாக இலெய்லோ பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதியஅமைச்சரவையில் இந்தியர்கள் இடம்பெற்றால் மீண்டும் பெருங்கலவரம் வெடிக்கும் என்று புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு ஏற்கனவேஎச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது நாடாளுமன்ற வளாகத்தை விட்டு புரட்சிக்காரர்கள் வெளியேற மறுத்துள்ளனர். இதனால், புதிய அரசுபதவியேற்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
புரட்சிக்காரர்களின் செய்தித்தொடர்பாளர் ஜோ நாடா கூறுகையில், நாடாளுமன்ற வளாகத்தில் ராணுவ வீரர்கள் சுட்டதில் இறந்த புரட்சிக்காரரின்இறுதிச் சடங்கு முடிந்த பின், வியாழக்கிழமைதான் நாங்கள் நாடாளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறுவோம் என்றார்.
இதற்கிடையே, தலைநகர் சுவாவில் அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications