For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீதையின் பாதையில்...

By Staff
Google Oneindia Tamil News

சொத்துத் தகராறில் அண்ணன் குடும்பத்தைக் கொன்ற போலீஸ்காரர்

தேனி:

மதுரை அருகே, தேனியில் சொத்துத் தகராறு காரணமாக அண்ணன் குடும்பத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் அதிரடிப் படை போலீஸ்காரர்.

தேனி அருகே வாழையாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (30). இவர் அதிரடிப் பிரிவில் போலீஸ்காரராக இருக்கிறார்.

இவரது அண்ணன் ராஜபாண்டியன் (35). அண்ணன், தம்பி இருவரும் வாழையத்துப்பட்டியில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். சகோதரர்கள் இருவரும்அண்மையில் நிலம் ஒன்றை வாங்கினார்கள். நிலத்திற்கான சொத்துப்பத்திரத்தை அண்ணன் ராஜபாண்டியன் தன் பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டார்.

இதனால் அண்ணன், தம்பி இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை இவர்கள் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டனர்.உறவினர்கள் வந்து அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். ஆனாலும் சவுந்தரபாண்டியனின் ஆத்திரம் தீரவில்லை. சனிக்கிழமை வேலைமுடிந்து வரும்போது துப்பாக்கியையும் கொண்டு வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தன் அண்ணன் ராஜபாண்டியன் வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தார். அங்கே தூங்கிக்கொண்டிருந்த அண்ணன் ராஜபாண்டியனைதூக்கத்திலேயே சுட்டார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு பதறியடித்துக் கொண்டு அங்கு வந்த அவரது அண்ணி அமிர்தமணி (30), மகன்கள் கார்த்திக் (9), விஜிகுமார் (11)ஆகியோரையும் துப்பாக்கியால் சுட்டார். இதில், விஜி குமார் தவிர மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விஜிகுமார் குண்டுகாயத்துடன்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆவேசம் தணிந்த சவுந்தரபாண்டியன் துப்பாக்கியுடன் போலீசில் சரணடைந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X