தமிழகத்தில் இன்று
இந்திய வர்த்தகப் பொருட்களுக்கு பாகிஸ்தானில் பெருகும் ஆதரவு
இஸ்லாமாபாத்:
இந்தியப் பொருட்கள் அதிக அளவு, பாகிஸ்தான் சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கு அந்நாட்டுவியாபாரிகளிடையே அபரிமிதமான ஆதரவு பெருகியுள்ளது.
காஷ்மீர் பிரச்சினையால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு சீராக இல்லை.இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான அரசு தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற பிறகுபாகிஸ்தானுடனான வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பியது. அதேபோல்பாகிஸ்தானும் இந்தியாவுடனான வர்த்தக உறவை வளர்த்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில், இந்தியப் பொருட்கள் தங்களது நாட்டுக்கு வந்தால் உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்திகுறையும் என்று அந் நாட்டு வர்த்தகர்கள் இடையே பயமிருந்து வந்தது. ஆனால், தற்போதுவியாபாரிகளிடையே அந்த பயம் நீங்கியுள்ளது. இந்தியப் பொருட்களை வாங்கி விற்க அவர்கள் அதிகம்விரும்புவதாகக் கூறப்படுகிறது.
வியாபாரிகளின் இந்த ஆதரவைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பாகிஸ்தானில் வியாபாரம்செய்ய இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்தும், அனுமதியும் கொடுப்பது பற்றி பாகிஸ்தான் அரசு யோசித்துவருகிறது.
பாகிஸ்தானின் இந்த முடிவின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு பலப்படும்.வர்த்தக உறவு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நல்லுறவும் மேம்படும் என்று நம்புகிறோம்என்றார் இஸ்லாமாபாத் தொழில் மற்றும் வர்த்தக சபையின் பொதுச் செயலர் சக்கீல் துரானிதெரிவித்தார்.
தற்போது பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் வலுவான வர்த்தக உறவு இல்லையென்றாலும்அதிகாரப்பூர்வமான வகையில் சுமார் ரூ.110 கோடி அளவுக்கு பொருட்கள் பறிமாற்றம்செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.