தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியாவுக்கு 2-வது முறை பெருமை சேர்த்த ஜோதி ரந்தாவா
செயின்ட் ஆன்ட்ரூஸ் (ஸ்காட்லாந்து):
பிரிட்டிஷ் ஓபன் கோல்ஃப் போட்டியில் விளையாடும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ஜோதி ரந்தாவா பெற்றுள்ளார்.
ஸ்காட்லாந்தில் சமீபத்தில் நடைபெற்ற கோல்ஃப் போட்டியில் அவர் சிறப்பாக ஆடி புள்ளிகள் குவித்ததை அடுத்து இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.இப்போட்டியில் கலந்து கொண்ட மற்ற இந்தியர்கள் யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
1997-ல் பிரிட்டிஷ் ஓபன் கோல்ஃப் போட்டியில் விளையாடிய முதல் இந்தியர் கவுரவ் கய் என்பது குறிப்பிடத்கக்கது. ஆனால் ஸ்காட்லாந்து போட்டியில்கலந்து கொண்ட அவர் தோல்வியடைந்துவிட்டார்.
28 வயதான ரந்தாவா டெல்லியைச் சேர்ந்தவர். இந்த ஆண்டு நடந்த இந்தியன் ஓபன் கோல்ஃப் போட்டியில் அவர் கோப்பையை வென்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications