தமிழகத்தில் இன்று
ரூ. 1.25 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை:
கம்ப்யூட்டர் மூலம் போலி ஆவணங்களைத் தயாரித்து ரெடிமேட் ஆடைதயாரிப்பாளர்களிடம் ரூ. 1.25 கோடி அளவுக்கு மோசடி செய்த கணவர், மனைவிஉள்பட நான்கு பேரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் பால வெங்கடேஷ். இவர் லென்னாக்ஸ் எக்ஸ்போர்ட்ஸ்என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையைச் சேர்ந்த பல ரெடிமேட் ஆடைதயாரிப்பு நிறுவனங்களை அணுகிய, வெங்கடேஷ், அமெரிக்காவிலுள்ள "ரஸ்டிக்ரிவர் என்ற நிறுவனத்திலிருந்து சலுகை விலையில் ரெடிமேட் ஆடைக்கானபொருட்களை வாங்கித் தருவதாக கூறி ஆர்டர் பெற்றுள்ளார்.
இதை நம்பிய பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், வெங்கடேஷிடம் ரூ. 1.25 கோடிமதிப்புள்ள ஆர்டர்களைக் கொடுத்துள்ளனர். பணத்துடன் அமெரிக்கா சென்றவெங்கடேஷ், அங்குள்ள செவோன் ஸ்போர்ட்ஸ்வேர் நிறுவனத்திற்குச் சென்றுள்ளார்.பிறகு அவர்களிடமிருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளர். அவற்றைசென்னைக்குக் கொண்டு வந்து கம்ப்யூட்டர் உதவியுடன் ரஸ்டிக் ரிவர் நிறுவன ஆர்டர்போல மாற்றியுள்ளார்.
போலி ஆர்டர்களை, பணம் வாங்கிய சென்னை நிறுவனங்களிடம் கொடுத்துள்ளார்.ஆர்டரில் கூறியுள்ளபடி பொருட்கள் வராத நிறுவன உரிமையாளர்கள், அமெரிக்கநிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போதுதான் மோசடி தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. பால வெங்கடேஷ் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்ததாக, வெங்கடேஷின்மனைவி சந்தனா, பி.ஆர்.பிரகாஷ் குமார், சதீஷ் குமார் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.
மே 29-ம் தேதி வரை வெங்கடேஷ் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருநதார்.தற்போது சனிக்கிழமை அவரை குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
யு.என்.ஐ.