தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

திட்டியதற்கு மன்னிப்பு கேட்காத செக் பிரதமருக்கு ஃபைன்

பராகுவே (செக்):

செக் பிரதமர் மைலாஸ் ஸெமான், அவருடைய கட்சி உறுப்பினரிடம் அவதூறாகப்பேசியதற்கு மன்னிப்பு கேட்கத் தவறியதால் அவருக்கு 528 டாலர் அபராதம்விதிக்கப்பட்டது.

செக் பிரதமர் மைலாஸ் ஸெமான். இவரது கட்சி சமூக ஜனநாயக கட்சி. இந்தக்கட்சியைச் சர்ந்த ஜோசப் வாங்கர் என்பவரை அவமானமாக பேசியதற்காக அவரிடம்மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்தீர்ப்பளித்திருந்தது.

பிரதமர் மைலாஸ் இந்தத் தீர்ப்பைக் கண்டுகொள்ளவில்லை. மன்னிப்பு கேட்கவில்லை.இதையடுத்து அவருக்கு செக் நாட்டு மதிப்புப்படி 20,000 கிரவுன் அதாவது 528அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிரதமர் மன்னிப்புக் கேட்கத் தவறியதால் அபராதம் விதிக்கப்படுவதாக நீதிபதிஎக்கினோ கோயன்யோவா கூறினார்

மைலாஸ், கோபத்துக்கு பெயர் போனவர். கோபமாக பேசியதற்காக பல அவதூறுவழக்குகளை சந்தித்திருக்கிறார். இப்போதும் மன்னிப்பு கேட்கத் தவறினால், 1 லட்சம்கிரவுன் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.

என்ன செய்யப் போகிறாரோ, பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+