தமிழகத்தில் இன்று
கோவை அருகே எரிமலையா?
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே எரிமலை உருவாவதற்கான அறிகுறி இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் சந்தானம் விளக்கம்அளித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் உயர் அழுத்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் கசிந்ததால் அப் பகுதியில் இருந்த பாறை உருகிவிட்டது. இதையடுத்துஅப் பகுதியில் எரிமலை உருவாகிறது என்ற செய்திகள் வெளியாகின.
இதை அவர் மறுத்து அளித்த விளக்கம்:
டாப்சிலிப் வழியாக அங்காலக்குறிச்சியிலிருந்து சர்க்கார் பதிக்கு மின்சார லைன் செல்கிறது. இந்த லைனிலிருந்து சுமார் 22 ஆயிரம் வோல்ட் மின்சாரம்கசிந்ததில், மின் கம்பம் பதிக்கப்பட்டிருந்த பாறைப் பகுதியில் வெப்பம் அதிகரித்து பாறையில் இருந்த இரும்புத் தாது உருகி பாறை உருமாறியிருந்தது.
இந்த வெப்பத்தால் அருகில் இருந்த சில மரங்கள் கருகியிருந்தது. இதனால் அப்பகுதியில் எரிமலைக் குழம்பு உருகி, இருகியது போன்ற அறிகுறிஏற்பட்டிருந்தது.
இதைக் கண்ட பொதுமக்கள் எரிமலை வெடிக்கப் போகுவதற்கு அறிகுறி என புரளியைக் கிளப்பியிருந்தனர்.
பாறையில் ஏற்பட்ட மாற்றத்துக்கும் எரிமலை ஏற்படுவதாகக் கூறப்படுவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவே மக்கள் பீதியடையத்தேவையில்லை என்றார் சந்தானம்.