தமிழகத்தில் இன்று
மதிமுக தலைவர்களுடன் வைகோ ஆலோசனை
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தல் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோசென்னையில் திங்கள்கிழமை மாவட்டச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்தியிலும், மாநிலத்திலும் மதிமுக ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும்சட்டசபைத் தேர்தலில் எப்படிச் செயல்படுவது, எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது என்பது குறித்துஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் அமைப்புத் தேர்தலை நடத்தி முடிப்பது என்றும் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் செஞ்சி ராமகிருஷ்ணன், கண்ணப்பன், ராதாகிருஷ்ணன், மகளிர்அணி செயலாளர் விஜயா தாயன்பன், துணைப் பொதுச்செயலாளர் குடியரசு, மற்றும் 35 மாவட்டச் செயலாளர்கள்கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications