தமிழகத்தில் இன்று
சி.டி.பி.டி.யில் கையெழுத்திடாத வரை இந்தியா மீது பொருளாதாரத் தடை நீடிக்கும் - ஜப்பான்
டோக்கியோ:
அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீதானபொருளாதாரத் தடை விலக்கிக் கொள்ளப்படாது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவும், பாகிஸ்தானும் அணு குண்டுகளை வெடித்துச் சோதனை நடத்தின. இச்சோதனைக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீது ஜப்பான் பொருளாதாரத் தடைகளை விதித்தது.
அதாவது இனிமேல் இரு நாடுகளுக்கும் புதிதாக கடன் கொடுப்பதில்லை என்று ஜப்பான் அறிவித்துவிட்டது. இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் ஜப்பான் பிரதமர் இந்தியா வரவுள்ளார். அப்போது இந்தியாவுக்கும்ஜப்பானுக்கும் இடையேயான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்தியா மீதான ஜப்பானின் பொருளாதாரத் தடைகளும் அப்போது விலக்கிக் கொள்ளப்படலாம் என்றுகூறப்படுகிறது.
இந் நிலையில், அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தத்தில் (சி.டி.பி.டி.) இந்தியாவும், பாகிஸ்தானும்கையெழுத்திடாதவரை அந் நாடுகள் மீதான பொருளாதாரத் தடை ஒருபோதும் விலக்கிக் கொள்ளப்படாது என்றுஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சக மூத்த அதிகாரி யுதாகா ஐமுரா தெரிவித்துள்ளார்.
சிடிபிடியில் கையெழுத்திட்டால் பொருளாதாரத் தடைகள் விலக்கப்படுவதுடன் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்புதிய கடன்களும் வழங்கப்படும் என்றார் அவர்.
இந் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ளவேண்டும்என்று ஜப்பானின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பொருளாதாரத் தடைகளால் இருநாடுகளுடனான வர்த்தகம் தடைபட்டுவிட்டதாக அவை கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.