தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கேரளாவில் கடும் மழைக்கு இதுவரை 71 பேர் பலி
திருவனந்தபுரம்:
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் இதுவரை 71 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவில் திருவனந்தபுரம், திருச்சூர், காசர்கோடு உள்பட பல மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துஓடுகிறது.
ஆறுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் திருவனந்தபுரம் உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன.
இச்சம்பவங்களில் பலர் பலியாகியுள்ளனர். இதுதவிர வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியில் உள்ள கடலில் மூழ்கி உன்னிகிருஷ்ணன் என்பவர்(35) இறந்தார். இதேமாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications