தமிழகத்தில் இன்று
திருநாவுக்கரசு "கண்டுபிடித்த" ஜெ, சசியின் வியாதி
சென்னை:
ஜெயலலிதா, சசிகலா இருவருக்கும் இப்போது புதுமையான வியாதி வந்துள்ளது. அதனால் தான் இருவரும் ஒரேகலர் சேலை, ஒரே டிசைனில் ஜாக்கெட் என்று அணிந்து கொள்கின்றனர் என்று எம்.ஜி.ஆர். அதிமுக கட்சித்தலைவர் திருநாவுக்கரசு எம்.பி. கிண்டல் செய்துள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளில் வரலாறு காணாத ஊழல் செய்தார். அவர் எத்தனை ஆயிரம் கோடிகொள்ளை அடித்தார் என்று இன்னும் மத்திய, மாநில அரசுகளின் ரகசிய போலீஸார் கூட கண்டுபிடிக்க முடியாமல்திணறிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வளவு பணத்தையும் மன்னார்குடி மாஃபியா கும்பலிடம் கொடுத்து விட்டு ஜெயிலுக்கும், கோர்ட்டுக்கும்ஜெயலலிதா அலைந்து கொண்டு இருக்கிறார். அதுதான் ஏன் என்று புரியவில்லை. உடன் பிறந்த அண்ணன்குடும்பத்துக்கு கொடுத்திருந்தாலாவது அர்த்தம் உண்டு.
ஜெயலலிதா 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தவில்லை. கமிஷன் மண்டி நடத்தி ஊழல் பணத்தை குவித்தார். அதற்குமக்கள் சரியான பாடம் கற்பித்தார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கிற சுயநல அரசியல்வாதி அவர்.
திருவிழா நேரத்தில் மட்டும் சாமி சிலையை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு போவார்கள். அப்படித்தான்ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் டாடா சியாரா காரில் அமர்ந்து பவனி வருவார்.
ஜெயலலிதாவும், சசிகலாவும் இப்போது ஒரே மாதிரி கலரில், டிசைனில் சேலை, ஜாக்கெட் அணிந்து கொண்டுவருகின்றனர். இது என்ன புதுமையான வியாதி என்று தெரியவில்லை. இந்த வியாதிக்கும் மக்கள் தான் மருத்துவம்செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications