தமிழகத்தில் இன்று
சிறுசேமிப்பு மூலம் ரூ.5,440 கோடி திரட்டி இந்தியாவில் மேற்கு வங்கம் முதலிடம்
கல்கத்தா:
1999-2000-ம் ஆண்டில் சிறுசேமிப்புத் திட்டத்தின் மூலம் ரூ.5,440 கோடி வசூலித்துஇந்தியாவிலேயே மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது.
இத் தகவலை தேசிய சேமிப்புக் கழகம் தெரிவித்துள்ளது. 1999-2000-ம் ஆண்டில்ரூ.4,500 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டிகூடுதலாக ரூ.940 கோடி திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறுசேமிப்பில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகமேற்கு வங்க மாநிலம் முதலிடம் வகித்துள்ளது.
தேசிய சேமிப்புக் கழகத்தின் புதிய திட்டப்படி, ஊழியர்களின் சம்பளப்பட்டுவாடாவின்போதே சிறுசேமிப்புத் தொகையை வசூலித்ததால் இச் சாதனையைப்புரிய முடிந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடப்பு நிதி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டத்தின் கீழ் மேற்கு வங்கமாநிலத்தில் உள்ள 2033 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 6 லட்சத்துக்கு 34 ஆயிரத்து169 ஊழியர்கள் சிறுசேமிப்புத் திட்டங்களில் சேர்ந்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications