தமிழகத்தில் இன்று
கொழும்பு-திரிகோணமலை ரயிலைத் தகர்க்க முயற்சி
கொழும்பு:
கொழும்புவிலிருந்து திரிகோணமலைக்குச் சென்று கொண்டிருந்த ரயிலைத் தகர்க்கசெவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
ரயில் பாதையில் வைக்கப்பட்ட குண்டு ரயில் வருவதற்கு முன்பே வெடித்துவிட்டது.இதனால், ரயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் பாதை மட்டும் ஓரளவுசேதமடைந்தது.
கொழும்பு-திரிகோணமலை ரயிலை கவிழ்ப்பதற்காக கிழக்கு திரிகோணமலைப்பகுதியில் பள்ளியூத்து என்ற இடத்தில் ரயில் பாதையில் குண்டு வைக்கப்பட்டிருந்தனர்.சரியாக மாலை 5 மணிக்கு வெடிக்கும் வகையில் அந்த குண்டு (டைம் பாம்)வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், சம்பவ இடத்துக்கு ரயில் வர சற்று தாமதமானது. இருப்பினும் சரியாக 5மணிக்கு குண்டு வெடித்தது. அதனால், ரயிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.ரயில் பாதை மட்டும் ஓரளவு சேதமடைந்தது.
சம்பவ இடத்துக்கு வந்து சோதனை நடத்திய பாதுகாப்புப் படையினர், அங்கிருந்துபேட்டரிகளையும், பியூஸ் வயர்களையும் பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்துக்குஅருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, திரிகோணமலை பகுதியில் கல்லார் மற்றும் தேஹேவட்டா இடையேபுலிகள் பதித்து வைத்திருந்த கண்ணி வெடியில் இலங்கை ராணுவத்தின் ஜீப் சிக்கிவிபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்தனர்.
யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி என்ற இடத்தில் இலங்கை ராணுவத்துக்கும்புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 2 புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவவீரர் ஒருவர் காயமடைந்தார்.
யு.என்.ஐ.