தமிழகத்தில் இன்று
தேனியில் 3 பேர் சுட்டுக்கொலை: 2 ஏட்டுக்கள் சஸ்பெண்ட்
தேனி:
தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்த இரண்டு தலைமைபோலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மாவட்ட டிஐஜி ராஜா உத்தரவின் பேரில், தலைமை போலீஸ்காரர்கள் ராஜா மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் தாற்காலிக வேலைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
தேனியில் அதிரடிப்படை போலீஸ்காரராக வேலை செய்து வந்தவர் சவுந்தரபாண்டி. வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவருக்கும், இவரதுஅண்ணனுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது போலீஸ் துப்பாக்கியால் தன் அண்ணன், அண்ணி மற்றும் அவர்களது மகனை துப்பாக்கியால் சவுந்தரபாண்டிசுட்டுக்கொன்றார்.
சம்பவத்தன்று இரவுப் பணியில் இருந்த சவுந்திரபாண்டி போலீஸ் நிலையத்தில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து 3 பேரையும் சுட்டுக் கொன்றுள்ளார்.
போலீஸ் நிலையத்திலிருந்து சவுந்திரபாண்டி துப்பாக்கி எடுத்துச் செல்வதைத் தடுக்காமல் இருந்ததையடுத்து இரண்டு தலைமை போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications