தமிழகத்தில் இன்று
பலத்த மழை: அமர்நாத் புனித யாத்திரை நிறுத்திவைப்பு
ஸ்ரீநகர்:
பலத்த மழை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் புனித யாத்திரை செல்லும் வழியில் புதன்கிழமை இரவு பலத்த மழைபெய்தது. இதையடுத்து அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் பாகல்ஹாம் மற்றும்பால்டால் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
புனித யாத்திரை செல்லும் பாதை வழுக்கலாக இருப்பதாலும் பலத்தபெய்திருப்பதாலும் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே,யாத்திரையை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஜூலை 13-ம் தேதியிலிருந்து இதுவரை 40,817பக்தர்கள் பாகல்ஹாம் வந்துள்ளனர். இவர்களில் புதன்கிழமை மாலை வரை 36,464பேர் அமர்நாத் குகைக் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையைச் செலுத்தியுள்ளனர்.
1996-ம் ஆண்டு ஜூலை -ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொண்ட யாத்திரையின்போதுநடைபெற்ற விபத்தில் 250 பக்தர்கள் இறந்தனர்.
அதற்குப் பின்பு விபத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட நிதேஷ் சென் குப்தாகமிஷனின் பரிரந்துரையின்படி பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
யு.என்.ஐ.