தமிழகத்தில் இன்று
தெ.ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட்: இலங்கை 341/5 வி. - ஜெயசூர்யா சதம்
கல்லே:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கல்லேயில் வியாழக்கிழமை துவங்கிய முதல்கிரிக்கெட் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்இழப்புக்கு 341 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் ஜெயசூர்யா சிறப்பாக ஆடி சதமடித்தார். முன்னதாக டாஸ் வென்ற இலங்கைஅணி முதலில் பேட் செய்தது.
துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஜெயசூர்யாவும், அட்டபட்டுவும் நின்றுஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்தனர். 54ரன்கள் எடுத்த நிலையில் அட்டபட்டு அவுட்டானார். அடுத்து வந்த ஆர்னால்டு 5ரன்களில் அவுட்டானார்.
ஆனால், அடுத்து ஆட வந்த ஜெயவர்த்தனே கேப்டன் ஜெயசூர்யாவுடன் இணைந்துஆடினார். இதற்கிடையே ஜெயசூர்யா சதமடித்தார். அவர் 148 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டாவார்.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள்எடுத்திருந்தது. ஜெயவர்த்தனே 78 ரன்களுடனும், தர்மசேனா 4 ரன்களுடன்அவுட்டாகாமல் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணியில் பால் ஆடம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.












Click it and Unblock the Notifications