தமிழகத்தில் இன்று
ஜப்பானில் 17 கி.மீ. நீள மனிதச் சங்கிலி - 27,000 பேர் பங்கேற்பு
ஒகினாவா (ஜப்பான்):
ஜப்பானில் நிறுத்தி வைத்துள்ள தனது துருப்புக்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒகினாவா தீவில்வசிக்கும் சுமார் 27 ஆயிரம் பேர் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஜப்பானில் நடைபெறும் ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் வெள்ளிக்கிழமை வரவுள்ள நிலையில், இந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தை ஜப்பானியர்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 17 கிலோமீட்டர் நீளத்துக்கு இந்த மனிதச் சங்கிலி இருந்தது.
ஆசிய-பசிபிக் பகுதியில் ஜப்பானில்தான் அமெரிக்க தனது அதிகப்படியான துருப்புக்களை நிறுத்தி வைத்துள்ளது. இதை ஜப்பானியர்கள் விரும்பவில்லை.
ஜப்பானின் ஒகினாவா தீவில் 55 ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதில 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்கொல்லப்பட்டனர். அமெரிக்கத் துருப்புக்களை தொடர்ந்து இங்கே இருக்கவிட்டால் 55 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரை நாங்களே மீண்டும் வரவழைத்துக்கொண்டது போல் ஆகும்.
அதுபோன்ற ஒரு பெரிய போரை சந்திக்க நாங்கள் தயாராக இல்லை. ஆகவே, தனது துருப்புக்களின் எண்ணிக்கையை அமெரிக்காகுறைத்துக்கொள்ளவேண்டும் என்று மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.
யு.என்.ஐ.