தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் மீதான செக்ஸ் வழக்கு: ஆகஸ்ட்டில் தீர்ப்பு
கோலாலம்பூர்:
மலேசிய துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மீதான செக்ஸ் குற்றச்சாட்டு வழக்கின்தீர்ப்பு ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
52 வயதாகும் அன்வர் இப்ராஹிம், 1993-ம் ஆண்டு கோலாலம்பூர் புறநகர்ப்பகுதியில் உள்ள ஓர் குடியிருப்பில் தனது கார் டிரைவருடன் ஓரினச் சேர்க்கையில்ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த13 மாதங்களாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்துவிட்டது.
இவ் வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அன்வருக்கு மலேசிய நாட்டுச் சட்டப்படி 20 ஆண்டுகடுங்காவல் தண்டனையும் சவுக்கடியும் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications