தமிழகத்தில் இன்று
பாட்னாவிலேயே தகனம் செய்யப்பட்ட சென்னை அதிகாரியின் உடல்
சென்னை:
பாட்னா விமான விபத்தில் பலியான சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி ராமச்சந்திரனின் உடல் பாட்னாவிலேயே தகனம்செய்யப்பட்டது.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அல்லையன்ஸ் ஏர்லைன்ஸின் விமானம் சில நாட்களுக்கு முன்பு பாட்னா விமான நிலையம் அருகேவிபத்துக்குள்ளானது. இதில் 60-க்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.
இவ் விபத்தில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் உயிரிழந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகவேலை பார்த்து வந்தார்.
ராமச்சந்திரன் இறந்த தகவல் கிடைத்ததும் அவரது மனைவி உமா, சகோதரர்கள் பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், உறவினர்கள் ஜெயராமன்,மகாலட்சுமி ஆகியோர் பாட்னா சென்றனர். ராமச்சந்திரன் உடலை பாட்னாவிலேயே தகனம் செய்ய அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து ராமச்சந்திரனின் உடல் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் விமானம் மூலம்சென்னை திரும்பினர்.
விபத்தில் பலியான அதிகாரி ராமச்சந்திரனுக்கு விக்னேஷ் என்ற 5 வயது மகன் இருக்கிறான்.
மற்றொரு அதிகாரி உடல் சென்னை வந்தது
பாட்னா விமான விபத்தில் பலியான சென்னையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி ஜெயகுமாரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. விமானநிலையத்தில் அவரது உடலுக்கு அவர் பணியாற்றி நிறுவனத்தின் ஊழியர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அசோக் நகரில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு ஜெயகுமாரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications