For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

புலிகளின் உளவாளியா? கைதான ராணுவ மேஜரிடம் விசாரணை

கொழும்பு:

தனது வீட்டில் கூடுதலாக ஆயுதங்களையும், ஏராளமான பணத்தையும்வைத்திருந்ததாக இலங்கை ராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் விடுதலைப் புலிகளுக்கு உளவாளியாகச் செயல்பட்டு வந்தாரா என்று அவரிடம்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையில் பணியாற்றிவிட்டு தற்போது ராணுவத்தலைமையகத்தில் பணியாற்றி வரும் ஒரு ராணுவ மேஜர் வீட்டில் திடீர் சோதனைமேற்கொள்ளப்பட்டது.

அப்போது வீட்டில் இரண்டு கைத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் இருந்தன. மேலும், 1லட்சம் ரூபாயும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விடுதலைப் புலிகளின் உளவாளியாக அவர் செயல்பட்டு வந்தாராஎன்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேஜரின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளையும், பணத்தையும்விடுதலைப் புலிகளிடமிருந்து அவர் வாங்கினாரா என்பதைத் தெரிவிக்க ராணுவஅதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X