தமிழகத்தில் இன்று
வாழப்பாடியும் தொடங்குகிறார் வன்னியர் சங்கம்
அரியலூர்:
தமிழகத்தில் வாழும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூக மக்களிடேயைவிழிப்புணர்வை ஏற்படும் நோக்கில் புதிய அரசியல் அமைப்பாக வன்னியர் சங்கம்தோற்றுவிக்கப்படும் என்ற தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திகூறினார்.
அரியலூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வன்னியர் சமூக மக்களின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்ற புதிய அரசியல்அமைப்பு ஏற்படுத்தப்படும்.
இது தொடர்பாக வன்னியர் தலைவரான மறைந்த ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளான செப்டம்பர் 6-ம் தேதி மாநில அளவிலான வன்னியர் விழிப்புணர்வு மாநாடுசென்னையில் நடைபெறும்.
புதிய வன்னியர் சங்கம் ஏற்படுத்துவது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித்தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் தீரன் மற்றும் பிற வன்னியர்தலைவர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
வன்னியர்கள் நலனுக்காக போராட பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கியராமதாஸ், வன்னியர்களின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை என்ற ராமமூர்த்தி,தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக ராமதாஸ் முடிவு செய்துள்ளார்என்றார்.
யு.என்.ஐ.