தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கலவரமாக மாறிய கல்லூரி மாணவர்களின் சாலை மறியல்

சென்னை:

கல்லூரி மாணவர்கள் நடத்திய சாலை மறியல் திடீரென்று கலவரமாக மாறியது. கலவரத்தில் ஈடுபட்டமாணவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தப்பட்டது.

இது பற்றி கூறப்படுவதாவது:

சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தி.நகரில் உள்ள துணிக்கடைக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றனர். அங்கு வந்த பெண்களிடம் அவர்கள் தகராறு செய்துள்ளனர்.

அது குறித்து கடை உரிமையாளரிடம் பெண்கள் புகார் கூறினர். கடை உரிமையாளரின் எச்சரிக்கையையும் மீறிமாணவர்கள் மீண்டும் தகராறு செய்தனர்.

இதையடுத்து அவர்களை கடை ஊழியர்கள் அடித்து வெளியே அனுப்பிவிட்டனர். அடிபட்ட மாணவர்கள்கல்லூரிக்கு வந்து தாங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கூறியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே வந்து கடற்கரைச் சாலையில்மறியலில் ஈடுபட்டனர். துணிக் கடை உரிமையாளரைக் கைது செய்யவேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடற்கரைச் சாலையில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் கமிஷனர் பெ. காளிமுத்து உள்பட உயர் போலீஸ்அதிகாரிகள் வந்து மாணவர்களிடம் பேசினார்.

துணிக் கடை அதிபரைக் கைது செய்வதாகக் கூறிய அவர் கலைந்து செல்லும்படி மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், மாணவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து மாணவர்களுக்கும், போலீஸாருக்கும்இடையே வாக்குவாதம் முற்றியது.

மாணவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். கலைந்து ஓடிய மாணவர்கள் பஸ்கள் மற்றும் பிறவாகனங்கள் மீது கல்வீசித் தாக்கினர். புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களைமாணவர்கள் தாக்கினர்.

இதையடுத்து மாணவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இச் சம்பவம் தொடர்பாக சிலமாணவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+