தமிழகத்தில் இன்று
சிங்கப்பூரில் தமிழ் இணைய மாநாடு - நாளை தொடங்குகிறது
சென்னை:
தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது. தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் கலந்து கொள்கிறார்.
தமிழ் இணையம் 2000 என்ற பெயரில் 3 நாட்களுக்கு இம் மாநாடு நடைபெறுகிறது.
தமிழில் கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பகுதிகளை பெரிய அளவில் பயன்பாட்டுக்குக்கொண்டு வருவது; உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களிடையே உறவைமேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இம் மாநாட்டில் ஆராயப்படும்.
இம் மாநாட்டில் அமைச்சர் தமிழ்க்குடிமகன் தவிர உயர் கல்வி மன்றத் துணைத்தலைவர் மு. அனந்தகிருஷ்ணன், வா.செ. குழந்தைசாமி, க.ப. அறவாணன், கதிர்மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
1997-ல் சிங்கப்பூரிலும், 1999-ல் தமிழகத்திலும் தமிழ் இணைய மாநாடுநடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் இப்போது நடைபெற உள்ளது மூன்றாவது மாநாடுஆகும்.












Click it and Unblock the Notifications