For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கருணாநிதி திறந்து வைத்த உருது அகாடமி
சென்னை:
சென்னையில் தமிழக அரசின் சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உருது அகாடமியை முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் அவர் பேசும்போது, உருது மொழியில் எத்தனையோ இலக்கியங்கள் உள்ளன. அவற்றை தமிழில் மொழிபெயர்க்க இந்தஅகாடமி பயன்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
உருது வெளிநாட்டு மொழி அல்ல. இந்தியர்களுடன் தொடர்பு கொள்ள உருவான இந்திய மொழி அது. உருதில் ஏராளமான கவிதைகள், இலக்கியங்கள்உள்ளன. அவற்றை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். அந்த முயற்சியில் இந்த அகடமி ஈடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.
கல்வி அமைச்சர் அன்பழகன் தலைமை வகித்தார். உருது அகாடமி துணைத் தலைவர் சையது சபியுல்லா, உறுப்பினர்கள் இசார் அகமது, சபா முஸ்தபா ஆகியோர்உருது மொழியில் வாழ்த்திப் பேசினர்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Saturday, July 22, 2000, 5:30 [IST]