தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
நெற்றியில் நாமம்...மில் ஊழியர்கள் நூதனப் போராட்டம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள ஆங்கிலோ பிரெஞ்சு மில் ஊழியர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நூதனப் போராட்டம் நடத்தினர்.
மில்லின் கேன்வாஸ் பிரிவு தொழிலாளர்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்டுக்கொண்டு தங்களுக்கு ரூ 1000 இடைக்கால நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள்.
ஏற்கனவே இவர்களுக்கு ரூ 200 இடைக்கால நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதை ஏற்க மறுத்து இடைக்காலநிவாரணமாக ரூ. 1000 வழங்கப்பட வேண்டும் என்று கோரி இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications