தமிழகத்தில் இன்று
அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் புத்த பிட்சுக்கள்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அதை எதிர்த்துவாக்களிக்க வேண்டும் என்று எம்.பிக்களுக்கு என்று புத்த மத சாமியார்கள் (பிட்சுக்கள்) கோரிக்கைவிடுத்துள்ளனர்.
வட கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வகை செய்யும் இலங்கை அரசின் புதிய அரசியல்திட்டத்தை ஏற்க முடியாது என்ற புத்த மத சாமியார்களில் இரு பிரிவினர் கூறியுள்ளனர். இவர்கள் புத்த மதத்தின்செல்வாக்கு மிக்க மல்வத்தே, அஸ்கிரியா பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இதுதொடர்பாக எம்.பி.க்களுக்கு எழுதியுள்ள கடிததத்தில் கூறியிருப்பதாவது:
வட கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் அளித்தால் நாடு துண்டாடப்படும். புதிய அரசியல் சட்டத்திற்குபுத்த மதத்தினரின் ஆதரவு எப்போதும் கிடையாது.
நாடாளுமன்றத்தில், தாக்கல் செய்யப்படும் சட்ட மசோதாவை எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகநிராகரிக்க வேண்டும். எங்களது நிலை குறித்து ஏற்கனவே சட்ட அமைச்சர் பெரிஸிடம் கூறிவிட்டோம் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
மல்வத்தே பிரிவுத் தலைவர் கூறுகையில், இந்த அரசியல் சட்டம் மிகவும் ஆபத்தானது. இப்போதுள்ள அரசியல்சட்டத்தில் இருப்பது போல புதிய அரசியல் சட்டத்தில் புத்த மதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதுதவறு என்றார்.
இப்போதைய அரசியல் சட்டத்தில் புத்த மதத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் புதிய அரசியல் சட்டத்தில்குறைக்கப்படவில்லை என்று அமைச்சர் பெரீஸ் அளித்த விளக்கத்தையும் புத்த சாமியார் ஏற்க மறுத்தனர்.
புத்த மத சாமியார்கள் சட்டத் திருத்தத்தை எதிர்த்துள்ளதால், இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் இலங்கைஅரசின் நடவடிக்கையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் புதிய அரசியல் சட்டதிருத்தத்தைஅமல்படுத்த அனைத்து எம்பிக்களின் ஆதரவையும் திரட்டும் முயற்சியில் அதிபர் சந்திரிகா முடிவுசெய்துள்ளார்.












Click it and Unblock the Notifications