தமிழகத்தில் இன்று
உதயமானது இன்னொரு கட்சி
திருச்சி :
தமிழ் மாநில தேசிய லீக் எம்எல்ஏ புவனகிரி நாசர் அக்கட்சியிலிருந்து விலகி இந்திய முஸ்லீம் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஞாயிற்றுக்கிழமை திருச்சியில்துவக்கினார்.
புவனகிரி தமிழ்மாநில தேசிய லீக் எம்.எல்.ஏ. நாசர் சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகினார். விரைவில் பதிய கட்சி துவக்குவேன் என்றுஅறிவித்திருந்தார். இந்த நிலையில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் இறுதியில், இந்திய முஸ்லீம் காங்கிரஸ் என்ற புதிய கட்சி துவக்க முடிவு செய்யப்பட்டது. கட்சியின் கொடியும் இறுதி செய்யப்பட்டது. வலதுபக்கம் பச்சை நிறமும், இடது பக்கம் வெள்ளை நிறமும் கொண்டதாக புதிய கட்சியின் கொடி உள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் கட்சியின் அறிமுக விழாவை திருச்சியில் நடத்த வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.