தமிழகத்தில் இன்று
காணாமல் போன ஆயுதங்களைத் தேடும் முயற்சியில் பிஜி ராணுவம்
வெல்லிங்டன்:
பிஜியில் புரட்சிக்காரர்களால் ராணுவக் கிட்டங்கியிலிருந்து திருடிச் செல்லப்பட்ட ஆயுதங்கள் மற்றும்வெடிமருந்துகளைத் தேடும் முயற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிஜி தீவில் கடந்த மே 19 ல் புரட்சிக்காரர்கள் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி மற்றும் அவரது அமைச்சரவையில்இருந்தவர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.
பல்வேறு குழப்பங்களுக்குப் பின் ராணுவ ஆட்சியாளர்களுக்கும், புரட்சிக்காரர்களுக்கும் இடையே சமரசஉடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ராணுவ கிட்டங்கியிலிருந்து புரட்சிக்காரர்கள் திருடிய ஆயுதங்கள்அனைத்தையும் அவர்கள் ராணுவத்திடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று முடிவானது.
ஆனால், திருடிய ஆயுதங்களில் சிலவற்றை மட்டுமே புரட்சிக்காரர்கள் ஒப்படைத்தனர். இதனால்அவர்களிடமிருந்து பிற ஆயுதங்களைக் கைப்பற்றும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
புரட்சிக்காரர்கள் ஆயுதங்களை எங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது குறித்தும் ராணுவ வீரர்கள் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.
புரட்சிக்காரர்கள் டஜன் கணக்கில் துப்பாக்கிகள் மற்றும் பிஸ்டல்களை ராணுவத்திடம் ஒப்படைக்காமல் காலம்தாழ்த்தி வருகின்றனர் என்று ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர்ஹோவர்டு பொலிடினி கூறுகையில், புரட்சிக்காரர்கள் கையில் வைத்துள்ள ஆயுதங்களை மீண்டும்அவர்களிடமிருந்து கைப்பற்றுவதே எங்களது இப்போதைய குறிக்கோள். ராணுவ வீரர்கள் பல குழுக்களாகபிரிக்கப்பட்டு ஆயுதங்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
இன்னொரு செய்தித்தொடர்பாளர் தாராகினிகினி கூறுகையில், புரட்சிக்காரர்களுக்கு இன்னும் பொதுமன்னிப்புவழங்கப்படவில்லை. அவர்கள் கைப்பற்றியுள்ள ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைத்தால்தான் பொதுமன்னிப்புவழங்கப்படும் என்றார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை புரட்சிக்காரர் ஒருவர் பிஜி நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் மீதுஇரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications