தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
கட்சி தொடங்குவோம் என்கிறது கம்மவார் நாயுடு சங்கம்
கோவை:
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் புதுக் கட்சி தொடங்குவோம் என்று கம்மவார்நாயுடு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களது16 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கம்மவார் நாயுடு சங்கத்தினர்கோவையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதில் பேசிய சங்கத் தலைவர்கெங்குசாமி நாயுடு, தங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் புதிய கட்சித்தொடங்கப்படும் என்றார்.
பிற்பட்டோர் பட்டியலில் கம்மவர் நாயுடு சங்கத்தைச் சேர்க்க வேண்டும்.துணைவேந்தர், நீதிபதி போன்ற உயர்பதவிகளில் இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களைநியமிக்க வேண்டும். மூடிக் கிடக்கும் பஞ்சாலைகளை திறக்க வேண்டும் போன்றகோரிக்கைகள் உட்பட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்நடந்தது.
உண்ணாவிரதத்திற்கு தலைமை வகித்த, சங்கத் தலைவர் கெங்குசாமி நாயுடுபேசுகையில், எங்களது கோரிக்கைகளை அரசு புறக்கணித்தால், தனிக் கட்சித்தொடங்குவோம் என அறிவித்தார்.












Click it and Unblock the Notifications