For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
நீதிமன்றத்தில் ஆஜரானார் அல்உம்மா பாட்ஷா
கோவை:
வீர சிவா என்பவர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்ஷா, கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கோவையில் கடந்த 1991-ம் ஆண்டு வீரசிவா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு கோவை 5வது நடுவர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
வழக்கு தொடர்பாக 9 பேர் ஜூலை 24-ம் தேதி ஆஜர் செய்யப்பட்டனர். இதில் குற்றப்பத்திரிக்கை வாங்காத இருவருக்கு குற்றப்பத்திரிக்கைவழங்கப்பட்டது. சாகுல் அமீது மற்றும் ஊம் பாபு ஆகியோர் இந்த நகலைப் பெற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து மாஜிஸ்திரேட் நம்பிராஜன் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Tuesday, July 25, 2000, 5:30 [IST]