தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மண்ணில் புதைந்து மாண்ட 2 கூலித் தொழிலாளர்கள்
கோவை:
கோவை அருகே மணல் லாரிக்கு மண் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது மணல் சரிந்ததில் இருவர் இறந்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சேத்துமடையைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (60). இவருடன்ரங்கசாமி (40), அசோகன், வேலுச்சாமி ஆகியோர் மாங்குழி என்ற இடத்தில் மண் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்ததில், வெள்ளியங்கிரி மற்றும் ரங்கசாமி ஆகியோர் மண்ணிற்குள்புதைந்து இறந்தனர். இது குறித்து காரமடைப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications