தமிழகத்தில் இன்று
சிட்னி ஒலிம்பிக்கிற்குச் செல்லும் இந்தியாவின் "மகா" தடகள அணி
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் சுமார் 62 பேர் கொண்ட இந்திய அணி பங்குகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 20 முதல் 22 பேர் தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் இருப்பர். சமீப காலத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட தடகளஅணிகளை விட இப்போதைய அணியே பெரியதாக இருக்கும்.
இந்திய அணிக்கான ஸ்பான்சர்ஷிப் செய்வது தொடர்பாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கும் இடையேயானஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.
இந் நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதி மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிப் போட்டியில் தடகளம், ஹாக்கி (ஆண்கள்), பாட்மிண்டன், குத்துச்சண்டை, ஜூடோ,துடுப்புப் படகு, துப்பாக்கிச் சுடுதல், டேபிள் டென்னிஸ், நீச்சல், டென்னிஸ் (இரட்டையர்), பளு தூக்குதல், மல்யுத்தம், வில் வித்தை ஆகிய பிரிவுகளில் இந்தியாபங்கேற்கிறது.
அதெலடிக் போட்டிகளில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு குறைவு என்றாலும் ஹாக்கி, டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம்ஆகியவற்றிலும் பதக்கம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்றார் சுரேஷ் கல்மாதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications