தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
புறா பிடிக்கப் போய் உயிரை விட்ட சிறுவன்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோயில் கோபுரத்தில் இருந்த புறாவைப் பிடிக்க முயன்ற சிறுவன் தவறிவிழுந்து இறந்தான்.
திருச்செந்தூருக்கு அருகே உள்ளது மணல்மேடு என்ற கிராமம். அங்கு வசித்து வந்தகருப்பையா என்பவரின் மகன் முத்துக்குமார்(15). முத்துக்குமாருக்கு புறாக்கள்என்றால் மிகவும் பிடிக்கும்,
புறாக்களை எங்கு கண்டாலும் போய் பிடித்து விடுவது அவரது பழக்கம். புதன்கிழமைகாலை திருச்செந்தூர் செப்புக்கொடிக்கம்பம் அருகே உள்ள சிறிய கோபுரம் மீது புறாஅமர்ந்திருந்தது. அதைப் பார்த்ததும் அதைப் பிடிக்கவேண்டும் என்று ஆசை வந்தது.கோபுரத்தின் மீது ஏறி புறாவைப் பிடிக்க முயன்றபோது தவறி விழுந்து தலையில்அடிபட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி அவர் அங்குஇறந்தார்.












Click it and Unblock the Notifications