தமிழகத்தில் இன்று
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு இல்லையே....
சென்னை:
இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டு போராடும் இலங்கைத் தமிழ் மக்களுக்குஇந்தியாவில் வாழும் தமிழர்கள் ஆதரவு தெரிவிக்காதது குறித்து புதிய தமிழக கட்சிதலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது இம்மாதம்1-ம் தேதி முதல் 17-ம் தேதிவரை அமெரிக்கா, கனடா. ஐரோப்பா நாடுகளுக்குச்சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
அங்குள்ள தமிழர்களை சந்தித்தபோது அவர்கள் அனைவரும் இலங்கையில் தனி ஈழம்கேட்டு போராடும் தமிழர்களை ஆதரிக்கின்றனர். ஆனால் இங்கு இந்தியாவில் உள்ளதமிழர்கள் தனி ஈழத்துக்கு ஆதரவு தெரிவிக்காததது வருத்தமளிக்கிறது.
உலக நாடுகளில் தற்போது ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சியை. புரிந்துகொள்ள மக்கள் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். உலகம் முழுவதும் மொத்தம் 15லட்சம் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.