தமிழகத்தில் இன்று
முஷாரப்பைக் கவிழ்க்க பெனாசிரை நாடுகிறார் நவாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் முஷராப் தலைமையில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிராக இணைந்து போராட முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவிற்கு, பதவியிழந்தபிரதமர் நவாஸ் ஷெரீப் தூது அனுப்பியுள்ளார்.
விமானக்கடத்தல், கொலை முயற்சி ஆகிய வழக்குகளில் தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்,துபாயில் இருக்கும் பெனாசிர் பூட்டோவைச் சந்திக்க தூதரை அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தானில் 1971 ல் ஏற்பட்டது போல் நெருக்கடியான சூழ்நிலை உருவாவதற்கு தெரிந்தோ, தெரியாமலோ தான் காரணமாகி விட்டதாக அவர்அதில் கூறியுள்ளார். தற்போது ராணுவத்தின் பிடியிலுள்ள பாகிஸ்தானை மீட்க வேண்டும். இதற்கு பெனாசிர் பூட்டோவின் கட்சியும், நவாஸ் ஷெரீபின்பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஷெரீப் கூறியுள்ளார்.
தேர்தலில் இணைந்து செயல்பட பெனாசிர் முன்வந்தால், முதல் நான்கு ஆண்டுகளுக்கு பெனாசிரே பிரதமராக இருக்கலாம். மேலும, தேர்தலில்பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து, தனது கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி வேட்பாளர்களை நிறுத்ததாது என்றும்ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தல் நடக்க, நாடு முழுவதும் இரு கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்த வேண்டும். அதற்குத் தேவையானபணத்தைத் தர தயாராக இருப்பதாகவும் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications