தமிழகத்தில் இன்று
"ஸ்டெர்லிங் சிவசங்கரன் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு
சென்னை:
ரூ. 15 கோடி வங்கி மோசடி வழக்கில் ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவன இயக்குநர் சி.சிவசங்கரன் மீது சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில்குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டுள்ள புகார் விவரம்:
1988-89ம் ஆண்டு சிவசங்கரனும், ஸ்டேட் பாங்க் கமர்ஷியல் பிரிவின் முன்னாள் தலைமைப் பொது மேலாளர் ஷெனாயும் சேர்ந்து, ஸ்டேட் பாங்கிலிருந்து ரூ.15 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். இதற்காக எந்தவித செக்யூரிட்டி தொகையும் செலுத்தப்படவில்லை. இதனால் வங்கிக்கு நஷ்டத்தைஏற்படுத்தியுள்ளனர் என்று சி.பி.ஐ. புகாரில் கூறப்பட்டுள்ளது.
இருவர் மீதும் இந்த வழக்கில் 1996-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருவரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிமனு செய்தனர். இருப்பினும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. நீதிபதி ஏ.எஸ்.கண்ணன் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தார்.ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications