For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பிணத்திற்கு வைத்த தீ பரவி 3 பேர் சாவு
சிவகங்கை:
சிவகங்கை அருகே இறந்தவரின் உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தபோது, பக்கத்தில் தீ பரவி 3 பேர் உடல்கருகி இறந்தனர்.
சிவகங்கை மாவட்டம் கண்ணாரியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் புதன்கிழமை இறந்தார். அவரது உடலைஅங்குள்ள சுடுகாட்டில் எரிக்கப்பதற்காகக் கொண்டு சென்றனர். அப்போது பிணம் வேகமாக எரிய வேண்டும்என்பதற்காக அப்பெண்ணின் உறவினர்கள் சிதையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர்.
அப்போது தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில், சிதைக்கு அருகே நின்றிருந்த 5 பேர் மீது தீப்பிடித்துக் கொண்டது.ஆபத்தான நிலையில், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர்இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Friday, July 28, 2000, 5:30 [IST]