தமிழகத்தில் இன்று
37.5 சதவீத வருவாய் மாநிலங்களுக்கு...மத்திய அரசு ஒப்புதல்
பெங்களூர்:
11-வது நிதிக் கமிஷனின் அறிக்கையும், பரிந்துரைகளும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
மத்திய அரசுக்கு வரிகள் மற்றும் வரிகள் அல்லாத இனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதுதொடர்பாக 11-வது நிதிக் கமிஷன் ஆராய்ந்தது.
இந்த கமிஷனின் ஆய்வு முடிந்து அறிக்கையும், பரிந்துரைகளும் தயார் செய்யப்பட்டது. பின்னர் அவற்றை கமிஷனின் தலைவர் பேராசிரியர் ஏ.எந். குஸ்ரோ,நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
நடப்பு ஆண்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கான இந்த அறிக்கையையும், பரிந்துரைகளையும் பரிசீலித்த மத்திய அரசு, கமிஷனின் இருமுக்கிய பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது.
மத்திய அரசுக்கு வரி மற்றும் வரி அல்லாத இனங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 37.5 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கலாம்.
பட்ஜெட் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சிகளின் வரி இனங்கள் விரிவுபடுத்தவேண்டும்.
தொழில் வரி இலக்கை மறு ஆய்வு செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை கமிஷன் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.