தமிழகத்தில் இன்று
300 தேயிலை விவசாயிகள் கைது
கோவை:
போராட்டம் நடத்தி வரும் நீலகிரி விவசாயிகள் மீது இரண்டாவது நாளாக போலீஸ்தடியடி நடந்தது. மேலும் 300 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். ஜூலை 27 ல் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தமுயன்றபோது, அவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு மற்றும்தடியடி நடத்தினர். மறியல் நடத்த முயன்ற 500 பேரைக் கைது செய்தனர்.
இப் போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. கேத்தி அருகே விவசாயிகள்சாலை மறியல் செய்ய முயன்றபோது அவர்கள் மீது லேசான தடியடிப் பிரயோகம்நடந்தது. சாலை மறியல் செய்ய முயன்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர்.இதனையடுத்து கைதானவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் கோவைக்கு அழைத்து வரப்பட்டு திருமணமண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications